ஆப்நகரம்

மதுரையில் அழகிரி ஆதரவாளர் மதுரைவீரன் படுகொலை; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி!

மதுரை: முக அழகிரி ஆதரவாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Nov 2018, 7:42 pm
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் மதுரை வீரன். இவர் முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான முக அழகிரியின் ஆதரவாளர் ஆவார்.
Samayam Tamil Madurai Veeran


இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், மதுரை வீரனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மதுரை வீரனின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கு மதுரை வீரன் மீது முன்விரோதம் இருந்துள்ளது.

இதனால் பழி வாங்கு நோக்கத்தில் கூலிப்படையை ஏவி, மதுரை வீரனைக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவான ஜோதிமணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, மதுரை வீரனின் மகளுக்கு முக அழகிரி தலைமையில் திருமணம் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய அழகிரி, மதுரை வீரன் போன்றோர் இருக்கும் போது, என்னை யாராலும் அசைக்க முடியாது என்று பேசினார். இந்த சூழலில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டது அழகிரி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி