ஆப்நகரம்

கொரோனா முன்னெச்சரிக்கை: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழக நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Samayam Tamil 16 Mar 2020, 8:00 pm
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் நடைபெற உள்ள கழக நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்


இந்தியாவில் மட்டும் கொரோன வைரஸால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய அவர் மருத்துவமனையின் தீவிர கண்கானிப்பில் உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. கைகளை சுத்தமாக கழுவுதல், மாஸ்க்குகள் போட்டுக் கொள்ளுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், ஒருவருக்கொருவர் சுமார் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், தேசிய பேரிடராக கொரோனாவை அறிவித்துள்ள மத்திய அரசு, அதனை நோய் தொற்றாகவும் அறிவித்துள்ளது.

ஸ்டாலின் அறிக்கை


இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தங்களது ஊழியர்களை பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 16 மாவட்ட எல்லைகளில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக பொதுச் செயலாளராகும் துரைமுருகன்?

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் நடைபெற உள்ள கழக நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி