ஆப்நகரம்

நாங்க இங்கயும் கண்டனம் தெரிவிப்போம் அங்கயும் கண்டனம் தெரிவிப்போம்!

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Apr 2018, 5:20 am
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ஐபிஎல் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம்!
ஐபிஎல் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், செவ்வாய்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருந்த சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியை நிறுத்த வேண்டுமென தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற போட்டிக்கு முன்பாக, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மைதானத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு போட்டிகளை பார்க்க வந்த ரசிகர்களையும், பாதுகாப்புக்காக இருந்த போலீஸாரையும் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். அதேசமயம், போட்டியைக் காண வந்த ரசிகர்களைத் தாக்கியவர்கள் மீதும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி