ஆப்நகரம்

+1 +2 பாடத்திட்டம்: சரியான ‘வாபஸ் பழனிசாமி’... எடப்பாடியைத் தாக்கும் ஸ்டாலின்

முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது!

Samayam Tamil 6 Jul 2020, 4:36 pm
பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அறிவித்துவிட்டு திரும்பப்பெறுவது வாடிக்கையாகிவிட்டது என்பதைக் குறிக்கும் நோக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ‘சரியான வாபஸ் பழனிசாமி’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படாது.பழைய பாடத்திட்டமே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்தது. இதற்குப் பலரும் வரவேற்பு அளித்து அரசுக்கு நன்று தெரிவித்தும் வருகின்றனர்.

பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வந்தபோது கல்வியாளர்கள், ஆசிரியர்கள்,சரியாபெற்றோர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் பழைய பாடத்திட்டமே தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக தனது வரவேற்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது! இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி!” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி