ஆப்நகரம்

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம்!

கர்நாடகா பேராசிரியர் சூரப்பா அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 5 Apr 2018, 10:21 pm
கர்நாடகா பேராசிரியர் சூரப்பா அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil surappa


கடந்த 2016ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, அதற்காக புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய 3 முறை தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமனம் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று உத்தரவிட்டுள்ளார்.

எம்.கே.சூரப்பா இந்திய அறிவியல் மையத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும், ஐஐடியில் 6 ஆண்டுகள் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோபார் ஐஐடியில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகள் வரை சூரப்பா இந்த பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி