ஆப்நகரம்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சர் சூப்பர் திட்டம்!

திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் விதமாக ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

Samayam Tamil 22 Apr 2022, 11:14 am
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு சமீப நாள்களில் குறைந்து வந்தது. நாட்டின் பிற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மட்டும் 12 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். பாதிப்பு குறைந்து தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
Samayam Tamil covid vaccine


ஜூன், ஜூலை மாதம் நான்காவது அலை ஏற்படும் என ஐஐடி ஆய்வாளர்கள் கூறிவந்த நிலையில் தொற்று அதிகரிப்பு பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐஐடி பாதிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக இருப்பதால் மெகா தடுப்பூசி முகாம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் அவர் அளித்த பேட்டியில்,"டெல்லி , ஹரியானா உத்திரப்பிரதேசம் ஆகிய மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, எனவே தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் என்பது அவசியமான ஒன்று. ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு உறுதியானவர்கள் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக ஐஐடியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
தொடரும் மின்வெட்டு: நிலைமையை ஸ்டாலின் எப்படி கையாள்வார்?
எனவே நெடுஞ்சாலை பணிகள் மற்றும் கட்டிடப் பணிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணியாட்களை அழைத்து வரும் இடைத்தரகர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாட்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாதோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது. இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக மே 8 ஆம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

அடுத்த செய்தி