ஆப்நகரம்

எம்.ஜெ.தி.மு.க - புதிய கட்சி துவங்கினார் தீபா கணவர் மாதவன்

தீபாவின் கணவர் மாதவன் எம்.ஜு.ஆர் ஜெயலலிதா திராவிர முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கியுள்ளார்.

TNN 21 Apr 2017, 11:29 am
சென்னை :தீபாவின் கணவர் மாதவன் எம்.ஜு.ஆர் ஜெயலலிதா திராவிர முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கியுள்ளார்.
Samayam Tamil madhavanhusband of jayalalithaa s niece deepa jayakumar launches his political party mjdmk
எம்.ஜெ.தி.மு.க - புதிய கட்சி துவங்கினார் தீபா கணவர் மாதவன்


ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஜெ., பிறந்தநாளன்று எம்ஜிஆர்-அம்மா-தீபா என்றச் பெயரில் பேரவை ஒன்றை ஆரம்பித்தார். இந்த பேரவையில் நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக தீபாவுக்கு அவரது கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்தனர். இந்த நிலையில் அவரது கணவர் மாதவன் புதிய கட்சி ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

இந்தநிலையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த மாதவன் தனது புதிய கட்சியின் பெயரையும் , கொடியையும் இன்று வெளியிட்டார்.இந்த கட்சிக்கு எம்.ஜு.ஆர் ஜெயலலிதா திராவிர முன்னேற்ற கழகம் என்று பெயரிட்டுள்ளார். மேலு கட்சி கொடியாக கருப்பு , சிவப்பு கொடி நடுவே வெள்ளை வட்டத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கொடி இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், " அதிமுகவினரை ஒன்றிணைப்பேன், இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் " என்று சபதம் எடுத்துள்ளார்.


madhavan,husband of #jayalalithaa 's niece deepa jayakumar launches his political party mjdmk

அடுத்த செய்தி