ஆப்நகரம்

புதிய விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டது: கவுல் உறுதி

புதிய வழக்கறிஞர்கள் மீது புதிய விதிகளின் படி, நடவடிக்கை எடுக்கப்பட மாட்டது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உறுதி அளித்துள்ளார்.

TNN 26 Jul 2016, 4:41 pm
சென்னை: புதிய வழக்கறிஞர்கள் மீது புதிய விதிகளின் படி, நடவடிக்கை எடுக்கப்பட மாட்டது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உறுதி அளித்துள்ளார்.
Samayam Tamil madras hc assurance means disciplinary rules are in abeyance chief justice kaul says
புதிய விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டது: கவுல் உறுதி


வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீசாரின் தடையை மீறி வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் நுழைய முயன்றதையடுத்து அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

வழக்கறிஞர்கள் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அவர்கள் போராட்டத்தி கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அதுவரை வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்த விதிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வழக்கறிஞர் காசி ராமலிங்கம் பொது நல மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். மேலும், சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்த விதிகளை நிறுத்தி வைத்தால், போராட்டத்தை தவிர்க்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும் விசரானையின் போது அவர் தெரிவித்தார்.

அப்போது, புதிய சட்டத்திருத்த விதிகளின் மீது வழக்கறிஞர்களுக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய விதிகளை மீண்டும் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கும்வரை, இந்த புதிய விதிகளின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டோம். இதற்கு என்ன அர்த்தம்? அந்த புதிய விதியை செயல்படுத்தாமல், நிறுத்தி வைப்பதாகத்தானே அர்த்தம். மறைமுகமாக இவை கூறப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் நோக்கம் வேறு விதமாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மூன்றாம் நபர்கள் எல்லாம் தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகின்றனர் என்றும் கவுல் தெரிவித்தார்.

அதனையடுத்து, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உயர் நீதுமன்றதின் அறிவிப்பு பத்திரிகைகளில்தான் வெளியாகி வருகிறது. எனவே, இதுதொடர்பான நீதித்துறை உத்தரவை இந்த நீதிமன்றம் பிறப்பித்தால், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என மனுதாரர் தெரிவித்தார்.

அதன்பின்னர், இதுதொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி கூறினார்.

அடுத்த செய்தி