ஆப்நகரம்

சிறையில் அடைக்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைப்பு

திருட்டு வழக்கு தொடர்பாக ஒரு பெண்ணுடன் 3 வயது குழந்தையையும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதித்துறை நடுவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

TNN 25 Jul 2016, 9:56 pm
மதுரை: திருட்டு வழக்கு தொடர்பாக ஒரு பெண்ணுடன் 3 வயது குழந்தையையும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதித்துறை நடுவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madras hc chides magistrate for sending three year old boy to prison with aunt accused in theft case
சிறையில் அடைக்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைப்பு


மதுரையைச் சேர்ந்த மாரியும் அவரது கணவர் முருகனும் அவர்களது மூன்று வயது குழந்தையுடன் கடந்த ஜூன் 19ஆம் தேதி மதுரைக்கு அருகிலுள்ள நல்லூர் அருகே நடந்த திருவிழாவில் வளையல் விற்கச்சென்றுள்ளனர். அப்போது விஜய் என்பவரையும் அவரது சகோதரி மாரியம்மாளையும் தங்களுடன் வளையல் விற்க அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அதற்குப் பிறகு, ஜூலை 21ஆம் தேதி முருகன் மற்றும் மாரியம்மாள் ஆகியோரை பழைய திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்புடையதாக மார்த்தாண்டம் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவர்களுடன் இருந்த முருகன் மற்றும் மாரியின் மூன்று வயது குழந்தையையும் அழைத்துச் சென்று குழித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதித்துறை நடுவர் பி.சண்முகம் முருகன் மற்றும் மாரியம்மாளுடன் சேர்ந்து அந்த குழந்தையையும் மதுரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கடந்த ஒரு மாதமாக தன் குழந்தையைப் பிரிந்துள்ள மாரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்திருக்கிறார். அதனை விசாரித்த கே.கே.சசிதரன் மற்றும் பி.கோகுல்தாஸ் அடங்கி நீதிபதிகள் அமர்வு குழித்துறை நீதிமன்ற நடுவர் பி.சண்முகத்தை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். அப்போது, மாரியின் மூன்று வயது குழந்தையையும் அழைத்துவர காவல்துறையினருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி, திங்கட்கிழமை குழித்துறை நீதிமன்ற நடுவர் பி.சண்முகம் நேரில் ஆஜரானார். தாய் சிறையில் இல்லாத போது குழந்தையை சிறையில் அடைத்ததாற்காக அவருக்கு நீதிபதிகள் இருவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், மாரியின் மூன்று வயதுக் குழந்தையை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி