ஆப்நகரம்

நுங்கம்பாக்கம் சுவாதி கொலை சம்பவம்: பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நுங்கம்பாக்கம் சுவாதி பெற்றோர் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Samayam Tamil 23 Sep 2022, 7:38 am
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil swathi


சென்னை நுங்கம்பாக்கம் ராயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்கிற நபரை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சோனியாவை சந்திக்கும் லாலு, நிதீஷ்: மெகா பிளான் ரெடி!
இந்நிலையில் தங்களின் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார். எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும், சுவாதி கொலை திட்டமிட்ட சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கோவையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு..! – போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்..!
இதனை தொடர்ந்து நீதிபதி, மனுதரார் இழப்பீடு கோரி சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று
தற்போதைய மனுவில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி