ஆப்நகரம்

எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்கக் கோரிய ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

TNN 16 Feb 2017, 12:50 pm
சென்னை: கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்கக் கோரிய ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madras hc dismissed the habeas corpus petition to rescue missing mlas
எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி


காணமல்போன பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மற்றும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா ஆகியோரை மீட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் ஆகியோர், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அளித்த அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைவைக்கப்படவில்லை என்றும், சொந்த விருப்பத்தின்பேரிலேயே தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்ததால், காவல்துறையின் அறிக்கையை ஏற்று ஆட்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Madras HC dismissed the Habeas Corpus petition to rescue missing MLA's, who had been halted at Kuvathur Resort for a long week.

அடுத்த செய்தி