ஆப்நகரம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலக படை பாதுகாப்பு நீட்டிப்பு

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் விளைவாக 2015ஆம் ஆண்டு முதல் மத்திய தொழிலக படையினரின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 21 Oct 2019, 3:00 pm
சென்னை: மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலக படையினரின் பாதுகாப்பு நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil high court


தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதேபோன்று நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் விளைவாக அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவின் படி, சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்திற்கு மட்டும் 2015ஆம் ஆண்டு முதல் மத்திய தொழிலக படையினரின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் மத்திய தொழிலக படை பாதுகாப்பு வழங்கி வருகிறது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி யாருன்னு தெரிஞ்சா நீங்களும் இந்த ரீயாக்‌ஷன்தான் கொடுப்பீங்க!

உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கும் உயர் நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளின் சேம்பர்கள், உயர் நீதிமன்ற அலுவலகங்கள் ஒருபகுதியாக பிரிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிலக படை பாதுகாப்பும், உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கும் கீழமை நீதிமன்றங்கள் ஒருபகுதியாக பிரிக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தி மாநில போலீசாரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நீதிமன்றங்களுக்குள் வழக்கறிஞர்களின் போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, ஒட்டுமொத்த உயர் நீதிமன்ற வளாகத்துக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக தலைமைப் பதிவாளர் ஒரு திட்டம் தயாரித்து அதை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பழைய முறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

அதேசமயம், சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த சிஐஎஸ்எப் பாதுகாப்பு ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிஐஎஸ்எப் பாதுகாப்பு வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அதனை நீட்டிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பேனர் விவகாரத்தில் அரசுக்கு சாதகமான தீர்ப்பா.? உச்ச நீதிமன்றம் செல்லும் டிராபிக் ராமசாமி...

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலக படையினரின் பாதுகாப்பு நீடிக்கும் என உத்தரவிட்டது. அத்துடன், உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆழ்ந்து ஆராயவும், சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துவது தொடர்பாக 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் பாதுகாப்பு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.

அடுத்த செய்தி