ஆப்நகரம்

அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கு வாபஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

Samayam Tamil 26 Sep 2022, 6:23 pm
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து அதிமுக கிளை செயலாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு


ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக கிளை செயலாளர் தணிக்காசலம் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சண்முகம் மற்றும் தணிக்காச்சலம் தொடர்ந்த உரிமையியல் வழக்குகளில் இடைக்கால உத்தரவு ஏதும் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு தடைக்கோரி தணிக்காசலம் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆ.ராசா விவகாரம்: ஸ்டாலின் பம்முகிறாரா? பதுங்குகிறாரா?
அப்போது மனுதாரர் தரப்பில் இந்த வழக்கானது காலவதியாகிவிட்டதால் வழக்கை திரும்ப பெற அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி