ஆப்நகரம்

பேரறிவாளனுக்கு பரோல்; அதுவும் இத்தனை நாட்கள் தான் - நீதிமன்றம்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 12:20 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பேரறிவாளன். இதையொட்டி 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். நாடு முழுவதும் தொடர் கதையாகி வரும் கொரோனா பாதிப்பு சிறைக் கைதிகளையும் விட்டுவைக்கவில்லை. பேரறிவாளன் இருக்கும் புழல் சிறையில் தற்போது வரை 50க்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். இவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பேரறிவாளனுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
Samayam Tamil Perarivalan


எனவே தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் அற்புதம்மாளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டன. கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என்று தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தேமுதிக விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது? வெளியான முக்கிய அறிக்கை!

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு கிடைத்த ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் தாய் அற்புதம்மாள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அடுத்த செய்தி