ஆப்நகரம்

சாரதா சிட்பண்ட் மோசடி: நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் - உயர்நீதிமன்றம்!

சென்னை: சிட்பண்ட் மோசடி வழக்கில், நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Jan 2019, 1:38 pm
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் விளம்பரப் படுத்தியுள்ளது. இதன்மூலம் ரூ.2,500 கோடி வசூலித்து, அதை திரும்பத் தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil Nalini


இந்தப் பணத்தை சிட்பண்ட் நிர்வாகிகள் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல், கடந்த 2013ல் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூடப்பட்டது.

இந்த மோசடி விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினிக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இந்த மோசடி குறித்தும், நளினி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு குறித்தும் சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியே விசாரித்து வருகின்றன.

கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் 5 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் நளினி சிதம்பரம் மீது சிபிஐ நேற்று 6வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த சூழலில், நளினி சிதம்பரத்திற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி