சென்னை: வேலை வாங்கித் தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-2015 காலக் கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ரூ.100 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது.
இதனால் அவரது நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras HC grants interim bail to former AIADMK minister V Senthil Balaji in connection with a job scam case.
கடந்த 2011-2015 காலக் கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ரூ.100 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது.
இதனால் அவரது நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras HC grants interim bail to former AIADMK minister V Senthil Balaji in connection with a job scam case.