ஆப்நகரம்

மது விருந்து: தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கும் வந்தது சிக்கல்!

சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மதுபான விநியோகம் செய்யும் அரசின் புதிய திருத்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 27 Apr 2023, 6:57 am
தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்னர், திருமண நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
Samayam Tamil liquor


இந்நிலையில் அந்த அறிவிப்பில் திருத்தம் செய்து, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சர்வேத கருத்தரங்கில் மட்டும் மதுபானங்கள் விநியோகம் செய்ய அரசு அனுமதி என அறிவிப்பு வெளியானது.

வழக்கு தொடர்ந்த கே.பாலு

அரசு முதலில் அறிவித்த திருமண நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என்ற அறிவிப்பு எதிராக சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
போலி ஆடியோ - மறுப்பு தெரிவித்த பிடிஆர் : பிளாக் மெயில் கும்பலின் திட்டம்!
அரசு திருத்தம் செய்து விட்டதே?

இந்த வழக்கு விசாரணை நேற்று (ஏப்ரல் 26) நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீங்கள் தாக்கல் செய்த மனுவில் உள்ள கோரிக்கையை அரசு நீக்கி, திருத்தம் செய்து விட்டதால், புதிய அறிவிப்புக்கு எதிராக தான் வழக்கு தொடர முடியும்” என கூறினர்.

விளையாட்டு அரங்கிலும் மதுவுக்கு நோ!

இதற்கு பதில் கூறிய மனுதாரர் தரப்பு, “நாங்கள் சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு போட்டிகள் என அனைத்துக்கும் சேர்த்து தான் தடை கேட்கிறோம். சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு குழந்தைகள், பெண்கள் என அனைவரும் வருவார்கள். ஆதலால், தமிழக அரசின் புதிய அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
ஐந்து நாள்களுக்கு மழை தான்: வானிலை ஆய்வு மையம் சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை!

இதனை தொடர்ந்து மதுபான விநியோகம் செய்யும் அரசின் புதிய திருத்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி