ஆப்நகரம்

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை தொடரும்: ஈபிஎஸ் அப்செட்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

TNN 20 Sep 2017, 1:57 pm
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
Samayam Tamil madras hc order extends interim ban on trust floor
நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை தொடரும்: ஈபிஎஸ் அப்செட்


தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி 18 சட்டமன்ற உறுப்பினா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதில் அனைத்து தரப்பு விவாதங்களைக் கேட்ட நீதிபதி துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை நீட்டிக்கப்படுவதாக உத்தரவிட்டார். ஏற்கெனவே, செப்டம்பர் 20ஆம் தேதி (இன்று) வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு வந்திருக்கிறது.

சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவிற்குத் தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

காலியாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. பின், இந்த வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி