ஆப்நகரம்

கைது உத்தரவு பிறப்பிக்க நோிடும் – நித்யானந்தாவிற்கு நீதிமன்றம் எச்சாிக்கை

மதுரை ஆதீனத்தின் 293வது இளைய மடாதிபதி விவகாரத்தில் பிப்ரவாி 2ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யப்படாவிட்டால் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நித்யானந்தாவிற்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சாிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 29 Jan 2018, 1:35 pm
மதுரை ஆதீனத்தின் 293வது இளைய மடாதிபதி விவகாரத்தில் பிப்ரவாி 2ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யப்படாவிட்டால் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நித்யானந்தாவிற்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சாிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil madras hc orders arrest of self styled godman nithyananda
கைது உத்தரவு பிறப்பிக்க நோிடும் – நித்யானந்தாவிற்கு நீதிமன்றம் எச்சாிக்கை


மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைவதற்கும், மடத்தின் நிா்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவிற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சோ்ந்த ஜெகதலபிரதாபன் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்திருந்த நித்யானந்தா, தான் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனம் என்றும், ஒருமுறை ஆதீனமாக பதவியேற்றுக் கொண்டால் அவா்தான் வாழ்நாள் முழுவதும் ஆதீனமாக இருப்பாா் என்றும், அதனை எந்த நீதிமன்றத்தாலும் ரத்து செய்ய இயலாது என்றும் தொிவித்திருந்தாா்.

புனிதமான ஆதீனத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் தன்னை எப்படி ஆதீன மடாதிபதி என்று கூறிக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினாா். மேலும் அந்த பதவியை நீக்கி விட்டு ஜனவாி 3ம் தேதிக்குள் புதிய பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தொிவித்திருந்தாா். ஆனால் மனுதாக்கல் செய்யப்படாமல் நித்யானந்தா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் பதில்மனு தாக்கல் செய்ய கூடுதலாக 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று நித்யானந்த தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி நித்யானந்தாவை இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாா். அப்போது குறுக்கிட்ட நித்யானந்தா வழக்கறிஞா் இறுதி அவகாசமாக சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தொிவித்தாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிப்ரவாி 2ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று தொிவித்து அடுத்த விசாரணையை 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

அடுத்த செய்தி