ஆப்நகரம்

சிவகாசி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு!

சிவகாசி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு!

TNN 26 Oct 2016, 7:12 pm
மதுரை : சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா
Samayam Tamil madras hc orders rs 3 lakh interim compensation for sivakasi fire accident victims
சிவகாசி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு!

3 லட்ச ரூபாய் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியில் கடந்த 20ம் தேதி பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. வேனில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த ஸ்கேன் சென்டருக்கு பரவியது. இந்த தீ விபத்தில் ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன் வந்து வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணை இரண்டு நாட்களாக நடைபெற்றுவரும் நிலையில் பட்டாசு கிடங்கு அருகில் ஸ்கேன் சென்டர் வைக்க அனுமதி அளித்த வருவாய்த்துறை அதிகாரியை அழைத்து விசாரணை நடத்தினர். இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிதியுதவியை நவம்பர் 25ம் தேதிக்குள் வழங்கி 28ம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் டி.எஸ்.பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி