ஆப்நகரம்

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்? - சென்னை ஐகோர்ட்

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது சாதி வாரியான கணக்கெடுப்பு ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 18 Dec 2020, 6:07 pm
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். இட ஒதுக்கீட்டில் அநீதி நிலவுவதாக குற்றம் சாட்டி வரும் ராமதாஸ் ஒரே இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள வளர்ச்சியடைந்த சமுதாயங்கள், அதேபிரிவில் உள்ள பின்தங்கிய சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைப்பதைத் தடுக்கின்றன என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து மிகவும் சரியானது.
Samayam Tamil chennai high court


இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த சிக்கலுக்கு சமூக நீதியின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். அத்தகைய தீர்வு எவரையும் பாதிக்கக்கூடாது என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைக்கிறார்.

இந்த நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஆனந்த் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்களை பிளவு படுத்தும் நோக்கிலும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது.

ஈஷா நடத்தும் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி: விவசாயிகள் கலந்துகொள்ளலாம்

தற்போது தமிழகம் சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது சாதி வாரியான கணக்கெடுப்பு ஏன் என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, போராட்டங்கள் மூலம் எதையும் அடைந்துவிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், சாதி வாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அடுத்த செய்தி