ஆப்நகரம்

ஸ்டாலினை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளில் விமர்சனம்: முன் ஜாமீன் நிராகரிப்பு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 16 Jun 2022, 5:02 pm
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்து பரப்பியதாக ஆரணி தாலுலா காவல் நிலையத்தில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார்.
Samayam Tamil முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்


அதில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
இந்தியர்களில் ஆயுள் குறைகிறது: மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை!
இந்நிலையில் செந்தில்குமார் தரப்பில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி