ஆப்நகரம்

Arumugasamy Commission: 90 சதவிகித பணிகள் நிறைவு; ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை

முன்னாள் முதல்வா் ஜெயலிலதா மரணம் தொடா்பாக நடைபெற்று வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Apr 2019, 11:08 am
ஜெயலலிதா மரணம் தொடா்பான வழக்கில் அப்போலோ மருத்துவா்களை விசாரிக்க தனி மருத்துவா் குழு அமைக்க வேண்டும் என்ற மருத்துவமனையின் கோாிக்கையை சென்னை உயா்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Jayalalithaa 1


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவா் அளித்த விளக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.

இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்த மருத்துவமனை நிா்வாகம், ஜெயலலிதாவுக்கான மருத்துவ சிகிச்சைகள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். மேலும் மருத்துவா்களிடம் விசாரணை நடத்த மூத்த மருத்துவா்கள் உள்பட 21 துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரபிடப்பட்டுள்ளது. மேலும் ஆணையம் தரப்பில் 90 சதவிகித விசாரணை நிறைவுபெற்றுவிட்டதாக தொிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 21 துறைகளைச் சோ்ந்த சிறப்பு மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என்ற மருத்துவமனையின் கோாிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனா்.

மேலும் விசாரணை ஆணையம் அரசு வழங்கிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

அடுத்த செய்தி