ஆப்நகரம்

தமிழக கோயில்களில் சட்டவிரோத பணி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக பணியில் இருப்பவர்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 22 May 2022, 11:13 am
நியமன உத்தரவுகள் இல்லாமல் தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக செயல் அலுவலர்களாக பணியில் உள்ளவர்களை நீக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்


சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள கோயில்களில், முறையான நியமன உத்தரவுகள் இல்லாமல் அரசு ஊழியர்கள், செயல் அலுவலர்களாக பதவி வகித்து வருவதாகவும், சட்ட விரோதமாக செயல் அலுவலர்களாக உள்ள அவர்களை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு பரம்பரை அல்லது பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும், முறையான நியமன உத்தரவு இல்லாமல் செயல்படும் செயல் அலுவலர்கள், கோவில்களின் நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளையும், நிதி சம்பந்தமான டெண்டர் உள்ளிட்ட முடிவுகளையும் எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையில் ஆட்சேபணை இல்லை: பொன்முடி தகவல்!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு, அறநிலையத்துறை உள்ளிட்டோர் 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்ற கோரிக்கைகளுடன் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இணைத்து பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி