ஆப்நகரம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதி இன்று முதல் விசாரணை

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை 3வது நீதிபதி சத்திய நாராயணா இன்று முதல் விசாரிக்கிறார்.

Samayam Tamil 23 Jul 2018, 12:21 pm
தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை 3வது நீதிபதி சத்திய நாராயணா இன்று முதல் விசாரிக்கிறார்.
Samayam Tamil h


ஜெயலலிதா மறைவுக்குப் பின் பிரிந்த அதிமுக எம்எல்ஏக்களில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழச்செல்வன் உள்பட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபால் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதனால், இந்த வழக்கு 3வது நீதிபதி சத்திய நாராயணனின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சத்தியநாராயணன், ஜூலை 23ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தினமும் வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார். இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் 3வது நீதிபதியின் விசாரணை தொடங்குகிறது.

அடுத்த செய்தி