ஆப்நகரம்

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு: இறுதி விசாரணைக்கு தேதி குறிச்சாச்சு!

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 3 Apr 2023, 12:23 pm
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.
Samayam Tamil ops


இந்த சமயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியாகியது. இதற்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்குகளில் தனி நீதிபதி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அண்ணாமலை தனி ரூட்: மோடியை வைத்து பக்கா பிளான் ரெடி!
அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேல்முறையீட்டு வழக்கில் பிரதான வழக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெறும்.
கர்நாடக தேர்தலில் களமிறங்கும் அதிமுக: பாஜக கூட்டணியில் எத்தனை இடங்கள்?
அன்றைய நாளில் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும் அவ்வாறு பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறினர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி