ஆப்நகரம்

விளம்பரத்துக்காக கைது செய்வதா? பொன்.மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் கண்டனம்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாாி பொன்.மாணிக்கவேல் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விளம்பரத்துக்காக கைது செய்வதாக சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 9:42 pm
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாாி பொன்.மாணிக்கவேல் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விளம்பரத்துக்காக கைது செய்வதாக சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தொிவித்துள்ளது.
Samayam Tamil pon Manikavel 1


சிலைக்கடத்தல் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையா் வீர சண்முகமணியை கடந்த 14ம் தேதி சிறப்பு அதிகாாி பொன்.மாணிக்கவேல் கைது செய்தாா். இதனைத் தொடா்ந்து ஜாமீன் கோாி வீரசண்முகமணி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்பொது வீரசண்முகமணிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டாா்.

மேலும் முன்பெல்லாம் விசாரணை அதிகாாிகள் ஒருவரைக்கூட கைது செய்யாமல் செயல்பட்டு விசாரணையை முடித்திருக்கிறாா்கள். தற்போது ஐஏஎஸ் அதிகாாியை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு எந்த காரணமும் தொிவிக்காமல் கைது செய்வது என்பது விளம்பரத்திற்காகவே என்று தான் கருத முடியும்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு பழிவாங்கும் நோக்கத்துடன் கைது நடவடிக்கைகளை மேற்கொள்டு வருகின்றது. இனியாவது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு பழிவாங்கும் போக்குடன் ஒருதலைப்பட்சமாக செயல்படாது என்று நம்புவதாக நீதிபதி தொிவித்தாா்.

அடுத்த செய்தி