ஆப்நகரம்

கடமையை செய்யும் பத்திரிகை நிறுவனங்கள்: அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

தமிழக அரசு சார்பில் பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 21 May 2020, 12:41 pm
தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசியது குறித்து, அவ்வப்போது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தமிழகம் முழுதும் தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil madras high court dismissed defamation cases


தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகிய நிறுவனங்களின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, 2012ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், அதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தி ஹிந்து தரப்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரதராஜன் ஆகியோரும், நக்கீரன் தரப்பில் கோபால், முரசொலி தரப்பில் செல்வம், தினகரன் தரப்பில் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், தினமலர் தரப்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

சென்னையை என்ன செய்யப் போகிறது கொரோனா?

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

“பத்திரிகைகள் அவர்களின் கடமைகளைத தான் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் மீது எப்படி அவதூறு வழக்கில் தாக்கல் செய்யப்படுகின்றது” என்று கருத்து தெரிவித்த நீதிபதி பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

அடுத்த செய்தி