ஆப்நகரம்

நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகள்: காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் இல்லை!

நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோருக்கு எதிராக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 14 Mar 2023, 6:34 am
நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Samayam Tamil madras hc


தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் காவல் துறையினர், எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என காவல் துறையினர் நன்னடத்தை பிரமாணம் பெறுவது உண்டு.

இந்த நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு, கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்திருந்தது.
சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!
இதன்படி நன்னடத்தை பிரமாணத்தை மீறியதாக சிறையிலடைக்கப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இருவேறு நீதிபதிகள் இருவேறு விதமாக தீர்ப்பளித்ததால், இதுசம்பந்தமான சட்டக் கேள்விக்கு விடை காண நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு, நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட இரு அரசாணைகளும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என அறிவித்தது.

மேலும், நீதித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் அதிகாரத்தை காவல் துறையினர் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த இரு அரசாணைகளும் அமலுக்கு வருவதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆஸ்கர் விருது வென்ற படைப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோருக்கு எதிராக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி