ஆப்நகரம்

விபத்துக்குள்ளாகும் வன விலங்குகள்: போக்குவரத்துக்கு தடை?

வாகன விபத்தில் விலங்குகள் பலியாவதைத் தடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 27 Jan 2022, 9:55 am
வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்க, கோவை - மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil road accident wild animals


தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், சாலைகளில் வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்கவும் உத்தரவிடக் கோரிய வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், கடந்த பத்து ஆண்டு புள்ளி விவரங்களின்படி, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி மூன்று சிறுத்தைகள் உள்பட 152 வன விலங்குகள் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதாகவும், வேக கட்டுப்பாட்டு விதிகளை ஓட்டுனர்கள் கடைபிடிக்காததால், வாகனங்கள் மோதி விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஞாயிறு ஊரடங்கு ரத்தா? முதல்வர் எடுக்கும் முக்கிய முடிவு!
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்தல் அறிவிச்சாச்சு: என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது?
தெங்குமரஹடா மற்றும் பவானி பிரதான சாலை புலிகள் சரணாலயம் வழியாக செல்வதாகவும், இந்த பகுதியில் 30 சதவீத புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், இந்த பகுதி தான் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இனப்பெருக்க பகுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கிராமத்தை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் போது, விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடியும் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி