ஆப்நகரம்

புதுச்சேரி பெண் மருத்துவருக்கு கலந்தாய்வில் அனுமதி: நீதிமன்றம் உத்தரவு!

பெண் மருத்துவரை, மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிக்கும்படி மத்திய மருத்துவ சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Oct 2022, 7:48 am
தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்ததால், பிறப்பிடச் சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் மருத்துவரை, மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிக்கும்படி மத்திய மருத்துவ சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madras hc


புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஹேமா, மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் கோரி விண்ணப்பித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூரைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் வழங்க மறுத்து புதுச்சேரி தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐடி துறையில் முன்னெடுக்க உள்ள திட்டங்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு!
இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் ஹேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நாட்டில் 90 சதவீதத்தினருக்கு, பிறந்தது ஓரிடமாகவும், பணியாற்றுவது வேறிடமாகவும் இருப்பதாகவும், தனது கணவர் திருக்கோவிலூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரி தான் தனது பிறப்பிடம் எனவும் அது மாறாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு சான்றுகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிடவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மருத்துவ மேற்படிப்பில் மனுதாரருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கவும், அவரை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வைத்திலிங்கத்தை கைவிடுவாரா ஓபிஎஸ்? எடப்பாடியின் எதிர்பார்ப்பு என்ன?
மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்குவது தொடர்பாக எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

அடுத்த செய்தி