ஆப்நகரம்

ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் - உயர் நீதிமன்ற நீதிபதி!

கொரோனா பரவல் குறையும் வரை தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளை தொடரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jun 2021, 3:14 pm
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 36 ஆயிரமாக இருந்த பாதிப்பு தற்போது 14ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இனிவரும் நாள்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசியும் அதிகளவில் செலுத்தப்படுகிறது. இதனால் தொற்று விரைவில் முழுமையாக கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.
Samayam Tamil Flight service


இந்நிலையில் இன்று முதல் ஊர்டங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டாஸ்மாக், டீக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கடைகள், பழுது நீக்கும் கடைகள், கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள், இ சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றி கொரோனா பரவலைக் குறைத்தால் விரைவில் விமான சேவை, பள்ளிகள் திறப்பு ஆகியவற்றுக்கு அனுமதியளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரவல் குறையும் வரை தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளை தொடரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மாணவர் சேர்க்கை இந்த இடங்களில் கிடையாது: அமைச்சர் திட்டவட்டம்!
அப்போது தமிழ்நாட்டில் சர்வதேச விமான பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததையும், தற்போது இரண்டாவது அலை தணிந்து வரக்கூடிய சூழலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

கொரோனா பரவல் குறையும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் நலன் கருதி கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

அடுத்த செய்தி