தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக 12 வாகனங்கள் செல்வது வழக்கம். ஆனால், இதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாளன்று, அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார். அன்றைய தினம் அவ்வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.
அப்போது அவ்வழியே சென்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வாகனத்தையும் 25 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைத்ததாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர். அதைத்தொடர்ந்து, முதல்வரின் பாதுகாப்புக்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 6ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்களை நிறுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முதல்வரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கும், போக்குவரத்தை சீரமைக்க முடிவு செய்ததற்கும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. அதே நேரம் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அப்போது அவ்வழியே சென்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வாகனத்தையும் 25 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைத்ததாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர். அதைத்தொடர்ந்து, முதல்வரின் பாதுகாப்புக்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 6ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்களை நிறுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முதல்வரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கும், போக்குவரத்தை சீரமைக்க முடிவு செய்ததற்கும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. அதே நேரம் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.