ஆப்நகரம்

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் ரத்து செய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 20 Dec 2019, 12:19 pm
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
Samayam Tamil தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்


வயதானவர்களை வீட்டிலேயே விட்டு வரவும்: ரஜினியை வம்புக்கு இழுத்த உதயநிதி!

இவர் உரிய தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை, அவரது நியமனத்தில் விதிமீறல்கள் இருப்பதாக தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

திருச்சி: போட்டியின்றி வெற்றிபெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.எம்.வேலுமணி அமர்வில் நடைபெற்றுவந்தது. முன்னதாக இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

குடியுரிமை திருத்தச்சட்டம் எதிர்ப்பு: நெல்லை,கோவையில் கடையடைப்பு... வீடுகளில் கருப்புக்கொடி

அந்தவகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி