ஆப்நகரம்

போக்ஸோ வழக்குகள்: தென் மண்டல ஐ.ஜி.க்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 17 Dec 2022, 3:41 pm
போக்ஸோ வழக்குகள் மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட குற்றங்களில் முறையான விசாரணைக்கு பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்ற உத்தரவை தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் முறையாக அமல்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Samayam Tamil asra garg


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் சிதம்பரம் நகர காவல் நிலைய நட்வடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், சிறார் குற்றங்களை கையாள்வது குறித்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், என்.ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் விவகாரத்தில் காவல்துறை செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு என்பவர் தாக்கல் செய்தார்.
ஆவின் பொருள்கள் பணக்காரர்களுக்கு மட்டுமா? விலை உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!
அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் பெயரில் தென் மாவட்டங்களில் போக்ஸோ வழக்குகள் மற்றும் சிறார் தொடர்புடைய குற்றங்களில் முறையான விசாரணை முடிந்த பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிடப்ப்பட்டதாகவும், இதனால் தென் மாவட்டங்களில் போக்ஸோ மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்-கிற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். அதேபோன்று தமிழகம் முழுவதும் அமல்படுத்தலாமே என காவல்துறைக்கு ஆலோசனை வழங்கினர்.
தமிழகத்தில் நீங்க ஒரு ஆணியும் புடுங்க முடியாது: பாஜகவை வறுத்தெடுத்த கீதா ஜீவன்
குற்ற சம்பவங்களில் சிறார்களை கையாள்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி