ஆப்நகரம்

ஏ.ஆர்.ரகுமானுக்கே சேவை வரியா? முக்கிய உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி ஆணையரின் நோட்டீஸ் தொடர்பான ஏ.ஆர்.ரகுமான் வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 11:30 am
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.
Samayam Tamil AR RAHman


ஒரு இசையமைப்பாளருக்கு தனது படைப்பு மீது முழுமையான காப்புரிமை இருக்கிறது. அந்த உரிமையை தயாரிப்பாளருக்கு அளித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட்டில் ஆச்சரியம்?- அதுவும் பள்ளி குழந்தைகளுக்கு; எகிறிய எதிர்பார்ப்பு!

எனது படைப்புகளுக்கான முழு காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு நான் வழங்கியுள்ளேன். இதற்காக நான் சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி ஆணையர் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒரு பாடலுக்கான இசையை தயாரிப்பாளருக்கு வழங்குவது என்பது சேவை அல்ல. எனவே அதற்கு சேவை வரி விதிப்பது தவறு. எனக்கு ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

ஜாமீனில் விடுதலையானார் கே.சி.பழனிசாமி

அதாவது, ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு வரும் மார்ச் 4ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜி.எஸ்.டி ஆணையர் இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி