ஆப்நகரம்

மணல் திருட்டை தடுக்க தானியங்கி வானூர்திகளை பயன்படுத்த ஐகோர்ட் ‘அட்வைஸ்’!

தமிழகத்தில் மணல் திருட்டை தடுக்க தானியங்கி வானூர்திகளை பயன்படுத்த ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

Samayam Tamil 6 Feb 2019, 5:38 pm
மதுரை: தமிழகத்தில் மணல் திருட்டை தடுக்க தானியங்கி வானூர்திகளை பயன்படுத்த ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
Samayam Tamil மணல் திருட்டு


கரூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தமிழகத்தில் சட்டவிரோதமான மணல் திருட்டை தடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது மணல் கொள்ளையை தடுக்க, தானியங்கி வானூர்திகளை அல்லது செயற்கைகோள் படங்களை ஏன் பயன்படுத்த கூடாது என கேள்வி எழுப்பினர். இதை கண்காணிக்க குழு அமைக்குமாறு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
தவிர, மணல் திருட்டில் சில அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் தான் இன்னும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் கிடைக்காமல் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி