ஆப்நகரம்

பத்திரிக்கை வைத்து அழைக்கணுமா? அரசு வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகள் காட்டம்!

சென்னை: அரசு வழக்கறிஞர்களை வசாரணைக்காக பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Oct 2018, 10:22 am
சென்னை - சேலம் இடையே பசுமைவழிச் சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி பா.ம.க எம்.பி., அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Samayam Tamil 3


இந்த வழக்கை, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர். இதற்காக தருமபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அரசுத் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

ஆனால், பதிலளிக்க கால அவகாசம் வழங்க கோரி, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ``தகவல் இல்லை என்றால் நீதிமன்ற அறைக்கு வரவேண்டாம். எட்டு வழிச் சாலை வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞர்களைப் பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா?' என காட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி