ஆப்நகரம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் முறிந்தன

வர்தா புயல் காரணமாக உயர்நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

TNN 12 Dec 2016, 11:43 am
சென்னை: வர்தா புயல் காரணமாக உயர்நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
Samayam Tamil madras high court worked with very thin attendance
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் முறிந்தன


வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதால், சென்னை மற்றம் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பொழியும் கனமழையால் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் வருகை இன்று மிகவும் குறைந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் புயல் காற்றினால் முறிந்துவிழுந்துள்ளன.

நீதிமன்றத்தில் இருக்கும் பணியாளர்கள் மற்ற யாரும் பணிக்கு வரவேண்டாம் என்று எச்சரித்து வருகிறார்கள். இதனால், நீதிமன்ற அலுவல்கள் முடங்கியுள்ளன.

அடுத்த செய்தி