ஆப்நகரம்

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 5வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஐந்தாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 14 Apr 2018, 1:52 pm
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஐந்தாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil madras
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 5வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்!


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக பொது நிர்வாகத்துறை மற்றும் ஊடகவியல் துறைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த செவ்வாய்க்கிழமை(ஏப்-10) முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 5வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்!


பல்கலைக்கழக அதிகாரிகள் உண்ணாவிரத்தைத்தை கைவிடுமாறு வலியுறுத்தியும், மாணவர்கள் அதை ஏற்கமறுத்து விட்டனர். இதனையடுத்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாணவர்கள், இன்று ஐந்தாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி