ஆப்நகரம்

சென்னைப் பல்கலை.போராட்டம்: லைவ் ரிப்போர்ட்!

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் சென்னையிலும் மாணவர்கள் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

Samayam Tamil 18 Dec 2019, 9:51 am
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன், சுப்பையா என்ற இரு மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Samayam Tamil சென்னைப் பல்கலை.போராட்டம்


கைது செய்த மாணவர்களை எங்கு கொண்டு சென்றார்கள் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் கைது செய்த மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி வளர்மதியிடம் சமயம் தமிழ் சார்பாக பேசினோம். “குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. நேற்று எங்கள் மாணவர்கள் இருவரை போலீஸார் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அவர்களை வைத்திருந்து இரவு 1 மணியளவில் விடுவித்துள்ளனர்” என்றார்.

உங்களுக்கான ஆதரவு எந்த அளவு உள்ளது என்று கேட்டபோது, “பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சார்ந்தோர், வழக்கறிஞர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க பல்கலைக்கழகத்துக்கு நேற்று வந்தனர். காவல்துறையினர் எங்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. வாசலோடு அவர்களை அனுப்பிவிட்டனர். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். எங்களோடு கரம் கோர்த்து போராட்டத்தை முன்னெடுக்க அழைத்துள்ளோம். பல்வேறு கல்லூரிகளில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அந்தப் போராட்டங்கள் நடைபெற வேண்டும்” என்றார்.

குடியுரிமை சட்டத்தின்கீழ் முஸ்லிம்கள் நாடு கடத்தப்படுவார்களா? - மத்திய அரசு விளக்கம் !!

குடியுரிமைச் சட்டம்... சென்னை பல்கலைக்கழகத்திற்கு 23 வரை கட்டாய விடுமுறை!

பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்ற போது, “போராட்டம் வலுவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுபோன்று விடுதிக்கு 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இதே போன்று நியூ கல்லூரி, பிரெசிடென்ஸி கல்லூரி ஆகியவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவித்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என்று வளர்மதி திட்டவட்டமாக கூறினார்.



அவங்கள கண்டதும் சுட்டுத் தள்ளுங்க: அமைச்சர் அதிரடி உத்தரவு !!

மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்களுக்கு நாட்டில் முதல் எதிர்ப்பு குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் கேட்கும். இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் கொதிநிலையில் உள்ள நிலையில் அதற்கான ஆதரவை தமிழ்நாடும் தற்போது வழங்கி வருகிறது. சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அதை முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி