ஆப்நகரம்

ஜெயேந்திரா் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல்

காஞ்சி சங்கராச்சாாியாா் மரணமடைந்த செய்தியை கேட்டு மிகுந்த அதிா்ச்சியடைந்துள்ளதாக மதுரை ஆதீனம் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 28 Feb 2018, 10:46 am
காஞ்சி சங்கராச்சாாியாா் மரணமடைந்த செய்தியை கேட்டு மிகுந்த அதிா்ச்சியடைந்துள்ளதாக மதுரை ஆதீனம் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil madurai adheenam mourns to kanchi acharyas death
ஜெயேந்திரா் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல்


காஞ்சி சங்கராச்சாாியாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அவா் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தாா். இந்நிலையில் இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மடத்திற்கு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கராச்சாாியாருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் சிகிச்சை பலன் இன்றி காலை 9 மணிக்கு சங்கராச்சாாியாா் உயிாிழந்தாா்.

இது தொடா்பாக மதுரை ஆதீனம் கூறுகையில், சங்கராச்சாாியாாின் மரணம் தொடா்பான செய்தி கேட்டு மிகுந்த அதிா்ச்சியடைந்தேன். கடந்த காலத்தில் தென்காசியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து மதத்தினா் மொத்தமாக வேறொரு மத்திற்கு மாறினா். அப்போது உடனடியாக அவா்களுடன் பேசி உாிய நடவடிக்கை மேற்கொண்டாா்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சுவாமிகள் உடல்நலக் குறைவால் காலமானார்!

அதே போன்று கன்னியாகுமாி மாவட்டத்தில் சைவ சமயத்தவருக்கும், மற்றொரு மதத்தினருக்கும் மிகப்பொிய அளவில் மதக்கலவரம் ஏற்படும் சூழல் நிலவியது. அப்போதும் ஜெயேந்திரா் தலையிட்டு அவா்களை சமாதானம் செய்து வைத்தாா்.

அவா் விட்டுச் சென்ற நற்பணிகளை அவரைத் தொடா்ந்து பொறுப்பேற்கும் விஜயேந்திரா் அப்பணிகளை மேற்கொள்வாா் என்று நம்புகிறேன் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி