ஆப்நகரம்

ஒருவழியா ஏய்ம்ஸ் கட்டும் பணி தொடங்கியாச்சு

மதுரை தோப்பூரில் கடந்த ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டிச் சென்ற நிலையில்...

Samayam Tamil 26 Nov 2019, 8:21 am
மதுரை தோப்பூரில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது. இதற்காக ரூ. ஆயிரத்து 264 கோடியும் ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து எந்தவொரு தெளிவான விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை. ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைய நிலம் கையகப்படுவதில் சிக்கல் இருபப்தாகக் அவ்வப்போது குற்றசாடுகள் மட்டும் எழுந்தன.
Samayam Tamil aiims-3


Chennai Rains: இங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை!

இந்த சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வாக, கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மதுரை தோப்பூரில் ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டிச் சென்றார். அதன் பின்னராவது மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் முரண்பட்ட கருத்துகளை அடுக்கி வந்தது.

ஒருபுறம் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தப்படாமல் இருக்கிறது எனக் கூறியது. அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு இப்போதுவரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு இப்போதுவரை நிதியை அளிக்கவில்லை எனக் கூறியிருந்தது.

மத்திய அரசு நிதி ஒதுக்கியது தவிர தமிழக அரசின் திட்டப்பணிகள் முடிந்தபின்னரே நிதி ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றி மதில் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் - ஓர் மீள்பார்வை

சுமார் 224.24 ஏக்கர் நிலப்பரப்பைச் சுற்றி இந்த சுவர் எழுப்பப்படுகிறது. இந்த சுவரை எழுப்ப 12 நீலமும் 10 அடி உயரமும் கொண்ட ஸ்லாப்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதில் சுவர் மட்டுமே இப்போது கட்டப்படுகிறது. மருத்துவமனை வளாகம் கட்டும் பணி தொடங்குவதற்கு எப்படியும் சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி