ஆப்நகரம்

போர்க்களமாக மாறிய அலங்காநல்லூர்: பலருக்கும் ரத்தக் காயம்

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தற்போது பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்கள் வீச, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்த என்று நிலைமை கட்டுக்கு மீறி சென்று கொண்டு இருக்கிறது.

TOI Contributor 23 Jan 2017, 12:04 pm
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தற்போது பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்கள் வீச, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்த என்று நிலைமை கட்டுக்கு மீறி சென்று கொண்டு இருக்கிறது.
Samayam Tamil madurai alanganallure is our of control
போர்க்களமாக மாறிய அலங்காநல்லூர்: பலருக்கும் ரத்தக் காயம்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது கலவரமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருவதுடன், அடிதடி தீ வைப்பு என்று நிலைமை மாறி வருகிறது.

மதுரை அலங்காநல்லூரில் பயங்கர பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் தாக்கியதில் பலருக்கும் மண்டை உடைந்து, காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றனர். பலரும் மயக்கமடைந்து விழுந்து கிடக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி