ஆப்நகரம்

தேவர் கிரீடம் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு!

முத்துராமலிங்க தேவா் சிலைக்கு வழங்கப்பட்ட தங்க கிரீடம் இன்று நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Samayam Tamil 27 Oct 2017, 10:10 am
முத்துராமலிங்க தேவா் சிலைக்கு வழங்கப்பட்ட தங்க கிரீடம் இன்று நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
Samayam Tamil madurai bank hands muthuramalinga thevar crown to memorial
தேவர் கிரீடம் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு!


இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழங்கினார். குருபூஜை தவிர மற்ற நாட்களில் இந்த கவசமானது மதுரை மேலுரில் உள்ள ஒரு வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த வாரம் குருபூஜை நடைபெற உள்ளதால் தங்க கவசமானது அதிமுக.வில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த கட்சி இரு பிரிவாக உள்ளதால் யாரிடம் வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர், எடப்பாடி தரப்பு அ.தி.மு.க.விடம் தங்க கிரீடத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்தது.

துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா் கடம்பூா் ராஜூ ஆகியோர் முன்னிலையில் கிரீடம் ஒப்படைப்பு நிகழ்வு நடக்கிறது. குருபூஜை நிறைவு பெற்ற பின்பு மீண்டும் கவசம் அதே வங்கியடம் ஒப்படைக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி