ஆப்நகரம்

பொள்ளாச்சி கொடூரம்: மதுரை தமுக்க மைதானத்தில் வெடித்தது மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து மதுரை தமுக்க மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.

Samayam Tamil 18 Mar 2019, 1:43 pm
மதுரை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து மதுரை தமுக்க மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.
Samayam Tamil madurai student


நாடு முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி கல்லூரி மாணவிகள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் தமுக்கம் மைதானம் அருகே திரண்டு குற்றவாளிகளுக்கு விரைவாகவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென மாணவர்கள் குவிந்ததால், அங்கு 200க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி