ஆப்நகரம்

அரியர் மாணவர்களின் நலன் கருதி மதுரை நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு..!

டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணத்தை செலுத்த மேலும் கால அவகாசம் தரலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில்லாத யோசனையை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Oct 2020, 2:57 pm
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் இறுதியாண்டு கடைசி செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. அதுபோல, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையும் நடத்தப்படாமல் இருந்தது. தொடர்ந்து கொரோனா பரவலும் இருந்து வந்ததால், செமஸ்டருக்கு கட்டணம் கட்டியிருந்த அரியர் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.
Samayam Tamil arrear exam


இந்த அறிவிப்பு தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கொரோனா காலக்கட்டத்தில் தேர்வு கட்டணங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை என்ற பாலிடெக்னிக் மாணவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், பருவ தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் மறுமதிப்பீட்டிற்கு அனுமதித்திருந்தேன். கொரோனா சூழலில் அதன் முடிவுகள் தாமாதமாகியதால், அரியர் தேர்வுக்கான தேர்வு கட்டணத்தை கட்ட முடியவில்லை. அதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால், கூடுதல் கால அவகாசம் கொடுத்து அரியர் தேர்வுகளை எழுத வழிவகை செய்யுங்கள் என கூறப்பட்டிருந்தது.

நகைச்சுவை அரசியலை நிறுத்துங்கள் ஜெயக்குமார்: கே.எஸ்.அழகிரி

இன்று இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வைத்தியநாதன் முன்பு வந்தது. அப்போது, மாணவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்ததன்படி, முடிவுகள் வருவதற்கு முன்னரே அரியர் தேர்வுகளுக்கான தேர்வு கட்டண கால அவகாசம் முடிவடைந்துவிட்டது. இதனால், இந்த மாணவர் மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள மற்ற டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒருமுறை கால அவகாசம் தரலாம். அவகாசம் வழங்குவது, தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்று நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அடுத்த செய்தி