ஆப்நகரம்

சான்றிதழ் வழங்க தாமதம் ஏன்? பிரிஸ்ட் பல்கலை. இயக்குநர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, ஒன்றரை வருடமாக வாழ்வாதாரத்தை இழந்த எனக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உத்தமபாளையத்தை சேர்ந்த அரவிந்த் ராஜ் வழக்கு தொடர்ந்தார்.

Samayam Tamil 22 Apr 2019, 12:52 pm
சான்றிதழ்களை வழங்க தாமதப்படுத்திய வழக்கில், பிரிஸ்ட் பல்கலைக்கழக இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil 2-Prist


தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த அரவிந்த் ராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், "கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை சபிதா பல்கலைக்கழகதில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பினை பயிலும் போது உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால், எனது படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகதில் எனது 2ஆம் ஆண்டு பொறியியல் படிப்பினை தொடங்க அணுகினேன்.

அப்போது முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தையும் சேர்த்து என்னிடம் வசூலித்தனர். பின் எனது பொறியியல் படிப்பினை முடித்த பின், 2017ஆம் ஆண்டு course completion சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் எனது provisional certificate தருவதற்கு பல்கலைக்கழகத்தினர் மறுப்பு தெரிவித்தனர். சில சான்றிதழ்களிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை சரி செய்ய பல்கலைக்கழகத்தை அணுகியபோது, என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு 2018ஆம் ஆண்டு எனது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனால் வேலைக்கு அணுக இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனவே பல்கலைக்கழகம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, ஒன்றரை வருடமாக வாழ்வாதாரத்தை இழந்த எனக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ். எஸ். சுந்தர் அமர்வு இது குறித்து அகில இந்திய தொழிநுட்ப கல்வி செயலர், தமிழக உயர்கல்விதுறைத்துறை செயலர், பிரிஸ்ட் பல்கலைக்கழக இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணையை 4 வாரங்கள் ஒத்திவைத்துள்ளனர்.

அடுத்த செய்தி