ஆப்நகரம்

போராட்டத்தை உடனே கைவிட்டால் பேச்சுவார்த்தை: உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியாக வேலைக்குத் திரும்பினால் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

TNN 15 Sep 2017, 11:45 am
மதுரை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியாக வேலைக்குத் திரும்பினால் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil madurai court orders to withdraw jacto geo protest
போராட்டத்தை உடனே கைவிட்டால் பேச்சுவார்த்தை: உயர்நீதிமன்றம்


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், போராட்டம் தொடரும் பட்சத்தில் அனைவரையும் ஒரு மணி நேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளது.

எந்த நிபந்தனையும் இல்லாமல் போராட்டத்தை வாபஸ் பெற்றால் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

அடுத்த செய்தி