ஆப்நகரம்

காதலிக்குமாறு பள்ளி மாணவிக்கு மிரட்டல்; மதுரை இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!

பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டிய வாலிபருக்கு, மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Samayam Tamil 29 Apr 2019, 11:32 pm
மதுரை மாவட்டம் நடுவக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன்(29). இவர் அதே ஊரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை, கடந்த 12.09.2017 அன்று காதலிக்க சொல்லி மிரட்டியுள்ளார்.
Samayam Tamil Rape


இதுகுறித்து அந்த மாணவியின் தாயார், 18.09.2017ல் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் மீனா வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் (பொறுப்பு), குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகனுக்கு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இதேபோல் மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி